மடிசார்
மடிசார் (Madisar) அல்லது கோஷவம் என்பது தமிழ் பிராமணப் பெண்கள் புடவை அணியும் முறையாகும். இத்தகைய புடவை கட்டும் முறை பண்டைய இந்தியாவைச் சேர்ந்தது, கிமு 2 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 1 ஆம் நூற்றாண்டு வரை அந்தரியா மற்றும் உத்தரிய ஆடைகள் ஒன்றிணைத்து ஒரே ஆடையாக உருவாக்கபட்டது. புடவை கட்டும் இந்த பாணி "கோஷவம்" எனவும் அழைக்கபடும். தமிழ் பிராமணப் பெண்கள் திருமணத்திற்குப் பிறகு இந்த பாணியைப் பயன்படுத்த வேண்டும் . வெவ்வேறு சமூகங்கள் அசல் கோஷவம் பாணியிலிருந்து வெவ்வேறு புடவை பாணிகளை உருவாக்கியுள்ளன, அதற்கு அதிக பொருள் தேவைப்படுகிறது - ஒன்பது கெஜம். தற்போதுள்ள ஒன்பது கெஜ புடவை பாணிகளில் மகாராஷ்டிராவின் நவ்வரி, கன்னட திரை, தெலுங்கு பிராமண பாணி ஆகியவை அடங்கும். மடிசாரி என்ற பெயர் பொதுவாக தமிழ் பிராமணர்களுடன் தொடர்புடையது, இது ஐயர் கட்டு மற்றும் ஐயங்கார் கட்டு என இரண்டு முறைகள் உண்டு. இன்று, மடிசர் தினசரி உடையாக அரிதாகவே அணியப்படுகிறது, இருப்பினும் பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பண்டிகை சந்தர்ப்பங்களில் மட்டும் மடிசர் பாணியை அணிகிறார்கள். மடிசார் அணிவதற்கு ஒன்பது கெஜ புடவை தேவைப்படுகிறது, தற்போதைய நவீன புடவை அணியும் உடைக்கு 6 கெஜம் தேவை. ஐயர் மற்றும் ஐயங்கார் பிராமணர்கள் திருமண விழா, சீமந்தம், அனைத்து மத சடங்குகள், பூஜை மற்றும் இறப்பு விழாக்கள் போன்ற சடங்கு / மத நிகழ்வுகளில் பெண்கள் மடிசார் அணிகிறார்கள்.